Published : 30 Nov 2017 09:26 AM
Last Updated : 30 Nov 2017 09:26 AM
திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையிலான ஆணைய அதிகாரிகள் அகர்தலா சென்றனர். இதுகுறித்து ஏ.கே.ஜோதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, வரும் 2019 மக்களவைத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள உதவும் இயந்திரத்தை (விவிபாட்) பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது வாக்கு பதிவான வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது சின்னம் அடங்கிய ரசீதை வழங்கும்.
இதற்காக, கூடுதலாக 23 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 16 லட்சம் விவிபாட் இயந்திரங்களை மத்திய அரசின், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் வாங்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். -ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT