Published : 30 Nov 2017 09:11 AM
Last Updated : 30 Nov 2017 09:11 AM
வரதட்சணை கொடுமை வழக்குகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்று விதிமுறைகளை வகுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கில் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு, வரதட்சணை கொடுமை புகார்களை விசாரிக்கும்போது, போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்தது. புகார்களைப் பரிசீலிக்க கமிட்டி அமைக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட 2 மூத்த வழக்கறிஞர்கள் வி.சேகர், இந்து மல்ஹோத்ரா இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர்.
இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு, “வரதட்சணைக் கொடுமை வழக்குகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் விதிமுறைகளை வகுக்க முடியாது. விதிமுறைகளை வகுப்பது வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க வகை செய்யும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-க்கு அப்பாற்பட்டதாகிவிடும்” என்று தெரிவித்தனர். இதன்மூலம் ஏற்கெனவே 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மறுஆய்வு செய்யும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT