Published : 12 Apr 2014 10:45 AM
Last Updated : 12 Apr 2014 10:45 AM

வடசென்னையில் பிரகாஷ் காரத் இன்று பிரச்சாரம்

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியை ஆதரித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் செய்கிறார்.

தண்டையார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் திடலில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் சிறப்புரை ஆற்றுகிறார். இத்தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x