Published : 22 Apr 2014 08:32 AM
Last Updated : 22 Apr 2014 08:32 AM

சையத் அலி ஷா கிலானி பாரத ரத்னா விருது பெற்றவரா?: பிரச்சாரத்தில் குழம்பிய நக்மா

நடிகையும், மீரட் தொகுதி காங் கிரஸ் வேட்பாளருமான நக்மா, ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானியை பாரத ரத்னா விருது பெற்றவர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூரில் காங்கிரஸ் வேட் பாளர் காஸிம் அலி கானை ஆதரித் துப்பேசிய நக்மா, “மோடியைப் பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று விடுங்கள் என பாஜகவின் கிரிராஜ் பேசியுள்ளார். அப்படி யானால், சையத் அலி ஷா கிலானிக் கும் மோடியைப் பிடிக்கவில்லை. அவர் பொறுப்பான மனிதர், பாரத ரத்னா விருது பெற்றவர். அவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டுமா? நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விட வேண்டுமா? பதவிக்கு வருவதற்கு முன்னரே இப்படிப் பேசுபவர்கள், பதவிக்கு வந்து விட்டால் என்ன செய்வார்கள்? என்று பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் கிலானிக்கும், ஷெனாய் இசைமேதை பாரத ரத்னா பிஸ்மில்லா கானுக்கும் இடையே வேறுபாடு தெரியாமல், நக்மா தவறுதலாகத் தெரிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x