காட்டாங்குளத்தூர் அருகே நள்ளிரவில் விபத்து: அமைச்சரின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

காரை ஓட்டிவந்த ஆயுதப்படை காவலர் கைது
இறையன்பு

இறையன்பு

Updated on
1 min read

காட்​டாங்​குளத்​தூர்: ஸ்கூட்​டர் மீது அமைச்​சரின் கார் மோதி​ய​தில் 26 வயது இளைஞர் உயி​ரிழந்​தார். விபத்தை ஏற்​படுத்​தி​ய​தாகக் கூறப்​படும் காரை ஓட்​டிவந்த சென்னை மாநகரக் காவல் ஆயுதப்​படை காவலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் காட்​டாங்​குளத்​தூரைச் சேர்ந்த சிவக்​கு​மார் மகன் இறையன்பு (26). இவர் நேற்று நள்​ளிரவு காட்​டாங் ​குளத்​தூர் சந்​திப்பு அருகே ஜிஎஸ்டி சாலை​யில் ஸ்கூட்​டரில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, சென்னை நோக்கி வந்த கார், அவரது ஸ்கூட்​டரின் மீது பயங்​கர​மாக மோதி​யது.

இதில் தூக்கி வீசப்​பட்ட இறையன்பு படு​காயமடைந்​தார். உடனடி​யாக மீட்​கப்​பட்டு செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்ட நிலை​யில், சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

விபத்​தில் சிக்​கிய கார், சமூகநலத் துறை அமைச்​சர் ஜெகதீஸ்​வரி​யின் சொந்த கார் என போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அமைச்​சரின் 3 பெண் குழந்​தைகள் ராஜ​பாளை​யத்​தில் இருந்து சென்னை நோக்கிவந்​த​போது கார் விபத்​தில் சிக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

காரை மதுரையைச் சேர்ந்த சின்ன அக்னி (28) என்​பவர் ஓட்டி வந்​துள்​ளார். இவர் சென்னை மாநகர காவல் ஆயுதப்​படை​யில் காவல​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இறையன்​பு​வின் தந்தை சிவக்​கு​மார் அளித்த புகாரின்​பேரில், வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. விபத்து தொடர்பாக கண்​காணிப்பு கேமரா பதிவு​கள் உள்​ளிட்ட ஆதா​ரங்​களை போலீ​ஸார் ஆய்​வு செய்​து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>இறையன்பு</p></div>
குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in