குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

விற்பனை வரி மேல்முறையீட்டு வரம்பு ரூ.1 கோடியாக உயர்வு
குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​கள் தொடர்​பான புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு அமைச்​சர் த.லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் பேசி​ய​தாவது: ஜிஎஸ்டி மற்​றும் முந்​தைய வரிச்​சட்​டங்​களின் வரி நடை​முறை​கள் மற்​றும் செய​லாக்​கம் குறித்த வணி​கர்​களின் குறை​கள் தொடர்​பான மனுக்​கள் மீது உரிய தீர்வு காண ரூ.3 லட்​சம் செல​வில் ஒரு சீர்​மிகு இணை​யதள வசதி உரு​வாக்​கப்​படும்.

தமிழ்​நாடு மதிப்​புக்​கூட்டு வரிச்​சட்​டம் மற்​றும் மத்​திய விற்​பனை வரிச்​சட்​டம் உள்​ளிட்ட முந்​தைய சட்​டங்​களின் கீழ் உள்ள வணி​கர்​களை நிர்​வகிக்க, ஒவ்​வொரு வணி​கவரிக் கோட்​டத்​தி​லும் ஒரு தனி வரி விதிப்பு வட்​டம் உரு​வாக்​கப்​படும். தமிழ்​நாடு விற்​பனை வரி மேல் முறை​யீட்​டுத் தீர்ப்​பா​யத்​தின் விசா​ரணை வரம்​பு, விற்​பனைத் தொகை​யானது தற்​போதுள்ள ரூ.1 லட்​சத்​தில் இருந்து ரூ.1 கோடி​யாக உயர்த்​தப்​படும்.

மாநில அளவி​லான தரவு பகுப்​பாய்​வு, அலு​வலர்​கள் பணித்​திறன் கண்​காணிப்​புக்கு புதிய பொருளா​தார நுண்​ணறி​வுப் பிரிவு உரு​வாக்​கப்​படும். வரி​வி​திப்​பு, தணிக்கை மற்​றும் திருப்​புத் தொகை உள்​ளடக்​கிய வரி செலுத்​து​வோருக்​கான சேவை​களின் தரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் வரி நிர்​வாகத்​தில் முகம் தெரி​யாத நடை​முறை விரிவுபடுத்​தப்​படும்.

மேலும், வணி​கவரித் துறை​யின் பயிற்​சிக்​கொள்கை மறு சீரமைக்​கப்​படும். சார்​ப​திவக எல்லை மறுசீரமைப்பு பொது​மக்​களுக்கு விரை​வான மற்​றும் தடையற்ற சேவை​களை வழங்க, சார்​ப​தி​வாளர் பணிப்​பளுவை குறைக்க ஒரு வரு​வாய் கிராமத்தை முழு​மை​யாக ஒரே சார்​ப​திவக எல்​லைக்​குள் கொண்​டுவர நடவடிக்கை எடுக்​கப்​படும்.

பணிப்​பழுவை சீராக பகிர்ந்​தளிக்​கும் வகை​யில் சார்​ப​திவக எல்​லைகள் மறுசீரமைக்​கப்​படும். பதிவுத்​துறை மென்​பொருள் செயல்​திறன் மற்​றும் பாது​காப்பை மேம்​படுத்த ஐஐடி சென்னை நியமிக்​கப்​படும். ஏபிஐ தொழில்​நுட்​பம் மூலம், நிகழ் நேரத்​தில் இறப்பு மற்​றும் வாரிசுரிமைச் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கப்​பட்டு போலி ஆவண பதிவு​கள் தவிர்க்​கப்​படும்.

செப்​.15 முதல் வங்​கி, வங்கி சாரா நிதி நிறு​வனங்​களில் கடன் பெறும்​போது உரிமை ஆவணங்கள் ஒப்​படைப்பு (எம்​ஓடி), ரசீது ஆவணங்​கள், நேரடி வருகை இல்லா ஆவணப்​ப​திவு முறை மூலம் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​படும்.

அக்​.15 முதல் நான்கு வகை​யான குடும்ப ஏற்​பாடு ஆவணங்​கள் காகிதமற்ற பதிவு முறை​யில் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்டு இணை​ய​வழி​யி்ல் ஆவணங்​கள் அனுப்பி வைக்​கப்​படும்.

ஏபிஐ தொழில்​நுட்​பம் மூலம் அறநிலை​யத்​துறை மற்​றும் வக்பு வாரிய நிலங்​களின் பதிவு​களை உரிய துறை அலு​வலர்​கள் நேரடி​யாக உள்​ளீடு செய்ய வழி​வகை செய்​யப்​படும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதிவு செய்​யப்​பட்ட சான்​றிதழ்​களின் நகல்​கள், மையக்​கணினி சான்​றிதழ் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு நேரடி​யாக அனுப்பி வைக்​கப்​படும்.

வரு​கை​யில்லா ஆவணப்​ப​திவு விரி​வாக்​கம் செய்​யப்பட உள்​ள​தால் சனிக்​கிழமை​களில் செயல்​படும் 100 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​கள் இனி வார​நாட்​களில் மட்​டும் செயல்​படும். சனிக்​கிழமை கட்​டாயப் பணி​முறை கைவிடப்​படும்​ என்​பன உள்​ளிட்​ட பல்​வேறு அறி​விப்​பு​களை அமைச்​சர்​ வெளியிட்​டார்.

குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு
தடுமாறிய திமுக எம்எல்ஏவை கைதூக்கிவிட்ட முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in