Published : 31 Mar 2023 06:45 AM
Last Updated : 31 Mar 2023 06:45 AM

புதுக்கோட்டை | லண்டனில் வேலை வாங்கித் தருவதாக ரூ.92 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

புதுக்கோட்டை: லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.92 லட்சம் மோசடி செய்த 3 பேரை புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிலின்வினோ மனைவி நிவிதா(26), கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்ராஜா(28), மதுரையைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன் மகன் ராஜ்கமல்(40). இவர்கள் 3 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சேகர், சீனிவாசன், சுப்பையா உள்ளிட்ட 9 பேரிடம் லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.92 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிவிதா, சந்தோஷ்ராஜா, ராஜ்கமல் ஆகிய 3 பேரை நேற்றிரவு கைதுசெய்தனர். மேலும், லண்டனில் வசித்துவரும் அபிலின்வினோவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x