Published : 30 Dec 2022 04:33 AM
Last Updated : 30 Dec 2022 04:33 AM

ஒட்டன்சத்திரம் அருகே காணாமல் போன இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்தாரா?

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள கருமண் கிணற்றை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிச.19-ம் தேதி முதல் இவரை காணவில்லை என குடும்பத்தினர், கள்ளிமந்தையம் போலீஸில் புகார் செய்தனர். இவரை தேடி வந்த நிலையில் நேற்று அங்குள்ள கிணற்றில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், அருண்குமார் இணைய வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இந்த விரக்தியில் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என இவரது மொபைல் போனை சோதனையிட்ட பிறகே தெரியவரும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x