Last Updated : 28 Dec, 2022 10:49 AM

 

Published : 28 Dec 2022 10:49 AM
Last Updated : 28 Dec 2022 10:49 AM

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் இருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (49). இவர் அப்பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார். இவரது தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 30 பேர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்ல நேற்று இரவு புறப்பட்டனர்.

பாதயாத்திரை குழுவினர் இன்று அதிகாலை சாத்தூர் அருகே உள்ள புல்வாய்ப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இந்த விபத்தில் கருப்பசாமி மற்றும் சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த சங்கரன் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x