Published : 14 Dec 2022 06:44 AM
Last Updated : 14 Dec 2022 06:44 AM

சென்னை | விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை: துபாய், ரியாத்தில் இருந்து சென்னைக்கு 4 விமானங்கள் நேற்று வந்தன. அந்த விமானங்களில் வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களின் உடமைகளை சோதனை செய்ததில், ரூ.1.37 கோடி மதிப்புள்ள 3.28 கிலோ தங்கம் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x