Published : 31 Dec 2021 02:18 PM
Last Updated : 31 Dec 2021 02:18 PM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஊழியர் உட்பட 2 பேர் கைது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உசிலங்காட்டுவலசை ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றுபவர் ஆக்கிடா வலசையைச் சேர்ந்த சீனிவாசன் (37). இவர், கடந்த 28-ம் தேதி பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்தனர்.

சாயல்குடி ஆனந்தா நகரைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் மகன் அசோக் என்ற ஜேசுராஜ் (27). இவர், கடந்த 29-ம் தேதி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் சாயல்குடி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜேசுராஜை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x