Published : 21 Feb 2024 05:29 AM
Last Updated : 21 Feb 2024 05:29 AM

சாப்பிடுவதற்காக பிடிக்கப்பட்ட 33 நன்னீர் ஆமைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட நன்னீர் ஆமைகள்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சமைத்து சாப்பிடுவதற்காகப் பிடிக்கப்பட்ட 33 நன்னீர் ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் நகராட்சி எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் கிராமத்தில், 5 குடும்பங்களைச் சேர்ந்த ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் 20 பேர், ‘பூம் பூம்' மாடுகளை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அங்குள்ள நீர்நிலையில் வசித்து வந்த நன்னீர் ஆமைகளை சாப்பிடுவதற்காக பிடித்துக் கொண்டிருப்பதாக விழுப்புரம் வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்றபோது, பானாம்பட்டு அருகே 17 வயதுடைய ஒருவர் ஆமைகளுடன் சென்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் 33 நன்னீர் ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், சமைத்து சாப்பிடுவதற்காக, வன விலங்கு பாதுகாப்புப் பட்டியலில் உள்ள நன்னீர் ஆமைகளைப் பிடித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 33 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் மீண்டும் நீர்நிலையில் விடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x