Published : 31 Dec 2023 04:14 AM
Last Updated : 31 Dec 2023 04:14 AM

சேலம் மாநகரில் 2023-ல் குண்டர் சட்டத்தில் 125 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்

சேலம்: சேலம் மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் செயல்கள் நிகழாமல் தடுக்கவும் மாநகர போலீஸார் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் ( 31-ம் தேதி ) முடிவடையும் 2023-ம் ஆண்டில் மட்டும் மாநகரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 125 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அதில், ரவுடிகள் 59 பேர், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 36 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் 13 பேர், பாலியல் குற்றவாளிகள் 8 பேர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் 3 பேர், பாலியல் வழக்குகளில் தொடர்புடைய 3 பேர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் 3 பேர் அடங்குவர். சேலம் மாநகரில் 125 பேர் நடப்பு ஆண்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x