தமிழகத்தில் புதிதாக 1,712 பேருக்கு கரோனா; சென்னையில் 368 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,712 பேருக்கு கரோனா; சென்னையில் 368 பேருக்கு பாதிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1020, பெண்கள் 692 என மொத்தம் 1,712 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 368 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 39,607 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 87,685 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,106 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 13,890 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,803 ஆகவும், சென்னையில் 396 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,557 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,46,323 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19,216 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 203.21 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 4 நடன கலைஞர்களும் மேத்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in