Published : 24 Aug 2017 12:47 PM
Last Updated : 24 Aug 2017 12:47 PM

தனிநபர் சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

“தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளமைக்காக மாண்புமிகு நீதிபதிகளுக்கு நன்றி கூறுங்கள்” என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளமைக்காக மாண்புமிகு நீதிபதிகளுக்கு நன்றி கூறுங்கள். இத்தகைய தருணங்களே இந்தியாவின் பெருமை" என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x