Published : 07 Dec 2016 12:32 PM
Last Updated : 07 Dec 2016 12:32 PM
என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களின் கண்களுக்கு சகாப்தம் ஜெயலலிதா என்று விக்ரம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ் திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அமெரிக்காவுக்கு சென்றிருந்தால், விக்ரம் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.
அமெரிக்காவிலிருந்து விக்ரம் விடுத்துள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தியை ஆழந்த வருத்ததுடனும், அதிர்ச்சியுடனும் கேட்டேன். அவர் ஒரு உயர்ந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற லட்சக்கணக்கானவர்களின் கண்களுக்கு சகாப்தமாகத் தெரிந்தவர்.
அவரது சொல்வன்மையை மறக்கவே முடியாது. தமிழகத்துக்கு மட்டுமல்ல, தேசத்துக்கே இது மிகப்பெரிய இழப்பு. கடவுள் அவர் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்" என்று தெரிவித்திருக்கிறார் விக்ரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT