Published : 21 May 2016 07:20 PM
Last Updated : 21 May 2016 07:20 PM
நிவின் பாலி நடிக்கவிருக்கும் தமிழ் படம் முழுவதும் தூத்துக்குடி பின்னணியில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' மற்றும் 'ப்ரேமம்' ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நிவின் பாலி. தமிழில் நேரடி படமாக அவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிவின் பாலிக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்பை முன்வைத்து அவரிடம் பல்வேறு தமிழ் இயக்குநர்கள் கதை கூறிவந்தார்கள். தற்போது அவர் கெளதம் ராமசந்திரன் இயக்கும் தமிழ் படத்தில் நாயகனாக நடிப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
இப்படம் முழுவதும் தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் கதையை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டனர். ஆனால், இக்கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இருப்பதால் மலையாளத்தில் வேண்டாம், தமிழில் மட்டுமே பண்ணலாம் என்று கூறியிருக்கிறார் நிவின் பாலி. இதனால் தமிழில் மட்டுமே இப்படம் உருவாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT