Published : 31 Jul 2019 07:48 PM
Last Updated : 31 Jul 2019 07:48 PM

விஜய் அண்ணாவுக்கு நன்றி: 'பிகில்' படப்பிடிப்பை முடித்துவிட்டு கதிர் மகிழ்ச்சி

'பிகில்' படப்பூஜையின் போது விஜய்யுடன் கதிர் | கோப்புப் படம்

'பிகில்' படத்தை முடித்துவிட்டு, தன் சந்தோஷத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கதிர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இதனால், இறுதிகட்டப் படப்பிடிப்பில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதிர், தனது படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். இது தொடர்பாக கதிர் தனது ட்விட்டர் பதிவில், “என் இதயம் பேச நினைப்பதை இந்த புகைப்படம் பேசுகிறது. 'பிகில்' படப்பிடிப்பு முடிந்தது. நீங்கள் கட்டிப்பிடித்தது எனக்கு மகிழ்ச்சியையும், நிபந்தனையற்ற அன்பையும் காட்டிய. விஜய் அண்ணாவுக்கு, நன்றி. சிறப்பான தருணங்களைத் தந்ததற்கு என் அன்பு. நன்றி அண்ணா” என்று தெரிவித்துள்ளார் கதிர்.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் நயன்தாரா, யோகி பாபு, இந்துஜா, வர்ஷா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 2-வது பாடலை வரும் வாரத்தில் வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

'பிகில்' படத்தை முடித்தவுடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x