Last Updated : 26 Aug, 2017 05:41 PM

 

Published : 26 Aug 2017 05:41 PM
Last Updated : 26 Aug 2017 05:41 PM

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம்: செப்டம்பரில் படப்பிடிப்பு துவக்கம்

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ராஜேஷ். அக்கதையில் நடிக்க சந்தானம் முன்வந்தார்.

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து முன்னணி நடிகராக உருவானவர் சந்தானம். தற்போது ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க முன்வந்தது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளார்கள்.

ராஜேஷ் - சந்தானம் இணையும் படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளதை ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் 'மன்னவன் வந்தானடி', 'சக்கப் போடு போடு ராஜா', 'ஓடி ஒடி உழைக்கணும்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம், அப்படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x