Last Updated : 31 Jul, 2017 06:10 PM

 

Published : 31 Jul 2017 06:10 PM
Last Updated : 31 Jul 2017 06:10 PM

நெஞ்சம் மறப்பதில்லை ஒரு இருண்ட படம்: ரெஜினா

இயக்குநர் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஒரு இருண்ட படமாக இருக்கும் என்றும், அந்த வகையில் தமிழில் முதல் முயற்சியாக அது இருக்கும் என்றும் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

மேலும் படம் பற்றி பேசியுள்ள அவர், " 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டுக்காக காத்திருப்பது வெறுப்பாக இல்லை. ஒவ்வொரு முறை வெளியீடு தேதி அறிவிக்கும்போதும், முதல் முறை அறிவிப்பின் போது இருந்தது போல எனக்குள் அதே ஆர்வம் இருக்கிறது.

நான் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு படம் அது. பேய் படமோ, மர்மப் படம் என்றோ சொல்ல முடியாது. இருண்ட படம் என்று சொல்லலாம். அந்த வகையில் முதல் முயற்சியும் கூட.

செல்வராகவன் கண்டிப்பான இயக்குநர் கிடையாது. ஆனால் நேர்த்தியை விரும்புவர். தனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்கும் என பலர் என்னிடம் கூறினர். அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. நல்லவேளை வைத்துக்கொள்ளவில்லை.

கதாபாத்திரத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் தருவதால் தான் மிகச் சில படங்களில் நடிக்கிறேன். தமிழில் வந்த கமர்ஷியல் பட வாய்ப்புகளில் ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து, என்ன நடக்கிறது என காத்திருந்து பார்த்தேன். நடிப்பில் வளர்ச்சியிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கற்று, முன்னேற்றி வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.

ரெஜினா தற்போது 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x