Last Updated : 15 Aug, 2016 02:09 PM

 

Published : 15 Aug 2016 02:09 PM
Last Updated : 15 Aug 2016 02:09 PM

2.0 படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடக்கம்: ரஜினி பங்கேற்கிறார்

ஷங்கர் இயக்கத்தில் அடுத்து வாரம் துவங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்க இருக்கிறார்.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.

தற்போது அமெரிக்காவில் சென்னை திரும்பியிருக்கும் ரஜினி, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அவரை லைக்கா நிறுவனத்தின் சுபாஷ் கரண், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் '2.0' படப்பிடிப்பில் ரஜினி - அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்த இருக்கிறார் ஷங்கர்.

'ரஸ்டம்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டதால், இப்படப்பிடிப்பில் அக்‌ஷய்குமாரும் கலந்து கொள்வார் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x