Published : 14 Aug 2016 12:16 PM
Last Updated : 14 Aug 2016 12:16 PM

காலைத் தாங்கியபடி சென்று உடற்பயிற்சி செய்கிறார் கமல்ஹாசன்: ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி

கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையின்போது போட்ட தையல் பிரிக்கப்பட்டுவிட்ட தாகவும், காலைத் தாங்கியபடி நடந்துசென்று உடற்பயிற்சி செய்து வருவதாகவும் ட்விட்டரில் கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கும் நன்றி தெரி வித்துள்ளார்.

அமெரிக்காவில் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப்படியில் இறங் கும்போது தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவமனையி லேயே சில நாட்கள் ஓய்வில் இருந்தார். சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினார்.

இந்நிலையில், ட்விட்டரில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அறுவை சிகிச்சை யின்போது போட்ட தையல் பிரிக்கப்பட்டுவிட்டது. கடந்த 2 நாட்களாக, காலைத் தாங் கியபடி நடந்து, உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று வருகிறேன். பிசியோதெரபி பயிற்சிகளை முழுவீச்சில் செய்து வரு கிறேன். நான் விரைவில் நலம் பெறவேண்டும் என்பதில் என் னோடு துணைநின்றவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x