Published : 16 Aug 2016 02:50 PM
Last Updated : 16 Aug 2016 02:50 PM
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்க இருக்கிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார்.
அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஆர்.டி.ராஜா. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். நயன்தாரா, பகத் பாசில் ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தைத் தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் படத்தையும் தயாரிக்க இருக்கிறார் ஆர்.டி.ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT