Published : 25 Jun 2017 05:19 PM
Last Updated : 25 Jun 2017 05:19 PM
செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' மற்றும் பாலா இயக்கிவரும் 'நாச்சியார்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
மோகன்.ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நாச்சியார்'. சென்னையில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் தஞ்சாவூரில் இப்படத்தின் முக்கிய காட்சிகளை சிலவற்றை படமாக்க திட்டமிட்டுள்ளார் பாலா. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது படக்குழு.
'நாச்சியார்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட போதே, செப்டம்பர் வெளியீடு என குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது செப்டம்பர் 29-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
ஆகையால், 'வேலைக்காரன்' மற்றும் 'நாச்சியார்' ஆகிய இரண்டு படங்களுமே செப்டம்பர் 29-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT