Published : 20 Aug 2018 10:32 AM
Last Updated : 20 Aug 2018 10:32 AM
'கோலமாவு கோகிலா' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ரஜினி.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி, ஜாக்குலின், சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் 3 கோடியைத் தாண்டியிருக்கிறது வசூல். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுமே நல்ல வசூல் என்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்ப அதிர்ச்சியாக ரஜினி சார் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். “சிரித்து ரசித்துப் பார்த்தேன்” என்று குறிப்பிட்டார். எனது படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. தன்னிம்பிக்கையாக உணர்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT