Published : 17 Feb 2018 09:22 PM
Last Updated : 17 Feb 2018 09:22 PM

இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'நடிகையர் திலகம்' திரைப்படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படத்தில் நடித்து கீர்த்தி சுரேஷ். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்துக்கு தமிழில் 'நடிகையர் திலகம்', தெலுங்கில் 'மகாநதி' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து நடத்தி வந்தார்கள். தற்போது, இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது படக்குழு. இன்னும் சில பேட்ச் வொர்க் எனப்படும் சிறுகாட்சிகளே படமாக்க வேண்டியதிருப்பதாக தெரிவித்தார்கள்.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், பத்திரிகையாளராக சமந்தா மற்றும் சாவித்திரியுடன் நடித்த நடிகர்களாக பல்வேறு முன்னணி நடிகர்களும் இதில் நடித்து வருகிறார்கள். 'யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். விஜயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x