Published : 23 Nov 2017 07:25 PM
Last Updated : 23 Nov 2017 07:25 PM
'ரிச்சி'க்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிவின்பாலி நம்பிக்கை தெரிவித்தார்.
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின்பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்டி, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. டிசம்பர் 8-ம் தேதி வெளியீடாக திட்டமிட்டுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டார்கள்.
தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர், தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
முதல் நேரடி தமிழ் படத்தில் நடித்திருக்கும் நிவின்பாலி இவ்விழாவில் பேசியதாவது:
'ரிச்சி' உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. இது எனது முதல் நேரடி தமிழ்த் திரைப்படம். இசை வெளியீட்டு விழா என்பதால் இன்று இசையமைப்பாளருடைய தினம். அவர்தான் இன்றைய நாயகன். இப்படத்திற்காக அருமையான இசையை அளித்திருக்கிறார் அஜ்னீஷ்
இப்படத்திற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவருடைய ஆதரவும் அவசியம். இப்படம் வெளியாகும் டிசம்பர் 8-ம் தேதிக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'ரிச்சி' என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT