Published : 26 Oct 2017 04:20 PM
Last Updated : 26 Oct 2017 04:20 PM

ஹாலிவுட் கலைஞர்களை இந்தியாவுக்கு கொண்டுவந்த படம் 2.0: ஏமி புகழாரம்

ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரின் திறனையும் ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் ஷங்கர் என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏமி பேசியதாவது:

''படத்துக்காகப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்துள்ள லைகா நிறுவனத்துக்கு நன்றிகள்.

ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரின் திறனையும் ஒருங்கிணைத்து, இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஷங்கருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் திறமைமிக்க கலைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். படம் மிகுந்த பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x