Published : 06 Oct 2017 07:17 PM
Last Updated : 06 Oct 2017 07:17 PM

தணிக்கையில் யு/ஏ சான்றிதழ்: மெர்சல் தீபாவளி தினத்தில் வெளியாகிறது

'மெர்சல்' படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

விஜய்யின் முந்தைய படங்களை விட அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ளதால், இதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் சொந்தமாகவே வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற 'மெர்சல்' படக்குழு விண்ணப்பித்தது. இதில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படத்தை தீபாவளி தினமான அக்டோபர் 18-ம் தேதி வெளியிடுவது உறுதி என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x