Published : 11 Feb 2020 02:40 PM
Last Updated : 11 Feb 2020 02:40 PM

ராம் கோபால் வர்மாவை தாத்தா என்று அழைத்த ராஜமௌலி

இயக்குநர் ராம் கோபால் வர்மாவை, ட்விட்டரில் தாத்தா என்று அழைத்துக் கிண்டல் செய்துள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

தெலுங்கிலிருந்து பாலிவுட் சென்று ஒரு காலத்தில் வெற்றிகரமான இயக்குநராக விளங்கியவர் ராம் கோபால் வர்மா. ஆனால் கிட்டத்தட்ட கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவரது ஒரு திரைப்படம் கூட இவரது ஆரம்ப கால வெற்றியையும், பாராட்டையும் தேடித் தரவில்லை. மாறாக நிறைய விமர்சனங்களையே சந்தித்தார்.

இருப்பினும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வருகிறார் ராம் கோபால் வர்மா. இவருக்குத் திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. இவரது ஒரே மகள் ரேவதிக்கு 2013-ம் ஆண்டு பிரணவ் என்ற மருத்துவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரேவதி-பிரணவ் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு நட்சத்திரங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தை முதலில் சமூக ஊடகங்களில் தெரிவித்தது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தனது ட்விட்டர் பக்கத்தில் ராம் கோபால் வர்மாவைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள ராஜமௌலி, "வாழ்த்துகள் ராமு தாத்தா அவர்களே. கடைசியாக உங்களைக் கட்டுப்படுத்தும் நபர் உங்கள் பேத்தியாக இருப்பார் என்று நினைக்கிறேன். சரி நீங்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ராமா தாத்தாவா, ராம் நானாவா அல்லது கிராண்ட்பா ராமுவா" என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜமௌலியின் இந்தக் கிண்டலான ட்வீட் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தவறவிடாதீர்

விஜய்க்குப் பின்னால் எவ்வளவு பேர்: கருணாஸ் சூசகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x