Published : 12 Jan 2023 10:48 AM
Last Updated : 12 Jan 2023 10:48 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 2 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்ந்து 60,215 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 17,925 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் நேற்றைய சரிவில் இருந்து மீண்டு இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன். காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2.90 புள்ளிகள் உயர்வுடன் 60,108.40 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.30 புள்ளிகள் உயர்வுடன்17,904.00 ஆக இருந்தது.

உலகளாவிய சாதமான சூழல், உள்நாட்டு அமெரிக்க மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் பற்றிய செய்திகள் குறித்த நம்பிக்கைகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, பவர் கிர்டு கார்ப்பரேஷன், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், தோடாத் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x