Published : 11 Jan 2023 10:37 AM
Last Updated : 11 Jan 2023 10:37 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 60,000 கீழாக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 39 புள்ளிகள் சரிந்து 17,847 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் நேற்றைய சரிவில் இருந்து மீண்டிருந்தாலும் ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமானது. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 58.29 புள்ளிகள் உயர்வடைந்து 60,173.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.85 புள்ளிகள் சரிந்து 17,890.30 ஆக இருந்தது.

உலகளாவிய சாதமான சூழல் நிலவிய போதிலும், எண்ணெய் விலையேற்றும், மந்தமான வெளிநாட்டு பணவரவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடங்கின.தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் பயணித்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, விப்ரோ, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிஸையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x