Published : 09 Dec 2016 10:31 AM
Last Updated : 09 Dec 2016 10:31 AM

இவரைத் தெரியுமா?- சஞ்சீவ் சர்மா

எரிசக்தி துறை நிறுவன மான ஏபிபி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏபிபி நிறுவனத்தின் சர்வதேச தொழில் பிரிவின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2011-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஏபிபி நிறுவனத்தினுடைய சர்வதேச புராடெக்ட் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

பிரான்சில் உள்ள இன்சியாட் கல்வி நிறுவனத்தில் தொழில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஏபிபி நிறுவனத்தின் சர்வதேச மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவராக இருந்தவர். இதே நிறுவனத்தின் ஆசிய பிரிவினுடைய தலை வராகவும் இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x