Published : 12 Dec 2016 09:43 AM
Last Updated : 12 Dec 2016 09:43 AM
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கு விப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு தொலைகாட்சி சானல் மற் றும் இணையதளத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது. அத னைத் தொடர்ந்து தேசிய அளவில் இலவச உதவி மையத்தையும் விரைவில் அமைக்க இருக்கிறது. 14444 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டால், டிஜிட்டல் முறையில் எப்படியெல்லாம் பரிவர்த்தனை செய்வது என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவை இன்னும் ஒரு வாரங்களுக்குள் தொடங்க இருக்கிறது.
இந்த விஷயத்தில் நாஸ்காம் உதவியை மத்திய அரசு கோரி இருக்கிறது. இதற்கான கால் சென்டர் அமைக்கும் பணி தொடங் கப்பட்டிருப்பதாக நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரி வித்தார். மேலும் அவர் கூறிய தாவது:
“இந்த உதவி மையத்தில் விழிப்புணர்வு மட்டுமல்லாமல் பரிவர்த்தனை செய்வதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் எந்த நிலை யில் இருக்கிறார்களோ, அந்த நிலையில் இருந்து ஒருபடி உயர்த்துவதுதான் இதன் நோக்கம். அடுத்த வாரத்துக்குள் இந்த சேவை செயல்பாட்டுக்கு வரும்” என்றார்.
இது குறித்த விழிப்புணர்வை உருவாக்க கடந்த வெள்ளிக் கிழமை டிஜிஷாலா என்னும் தொலைக்காட்சி சானல் அறி முகம் செய்யப்பட்டது. இந்த சானல் தூர்தர்ஷன் டிடிஹெச்-ல் ஒளிபரப்பாகும். கேஷ்லெஸ் இந்தியா என்னும் இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT