Published : 21 Nov 2016 11:01 AM
Last Updated : 21 Nov 2016 11:01 AM
தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லீம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முஸ்லீம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லீம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. முஸ்லீம் மக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.
``பல்வேறு விதிகள் மற்றும் சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும் இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லீம் வங்கிகள் இந்தியாவில் படிப்படி யாக கொண்டுவரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லீம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்களைக் கொண்டு வரப்படும். முழுவதும் முஸ்லீம் வங்கிகளைக் கொண்டு வருவது தற்போது உள்ள சூழ்நிலையில் மிக சிக்கலானது’’ என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்த கேள்விக்கு நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது. முஸ்லீம் வங்கி கள் என்பது வட்டிகள் ஏதும் விதிக்கப்படாமல் இயங்குவது. முஸ்லீம் மதத்தின்படி வட்டி விதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT