Published : 22 Aug 2022 09:05 AM
Last Updated : 22 Aug 2022 09:05 AM

ஃபிரீடம் 75 பாரத் ஃபைபர் திட்டம் - பிஎஸ்என்எல் சலுகைகள் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் கோவை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபிரீடம் 75 பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாட்களுக்கு ரூ.275-க்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாட்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775-க்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜி5 பிரீமியம், வூட் செலக்ட் போன்ற ஓடிடி சேவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சுதந்திர தின சலுகை வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும், பிஎஸ்என்எல் தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதிமாதம் 75 ஜிபி டேட்டாவுடன் அளவற்ற அழைப்புகளுடன் 300 நாட்கள் வேலிடிட்டி ரூ. 2,022-க்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2,399 மற்றும் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 75 ஜிபி டேட்டாவைக் கூடுதலாகப் பெறலாம். இச்சலுகை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மட்டுமே.

பிஎஸ்என்எல் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் புதிய சிம்கார்டையும், 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகளை ரூ.108-க்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாற்றி சிறப்புச் சலுகைகளைப் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x