Last Updated : 29 Sep, 2016 11:05 AM

 

Published : 29 Sep 2016 11:05 AM
Last Updated : 29 Sep 2016 11:05 AM

சுப்ரதா ராய் ஜாமீன் அக்.24 வரை நீட்டிப்பு

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் ஜாமீன் வரும் அக்டோபர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர அதே நாளில் 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹாரா குழுமத்தின் வழக் கறிஞர் கபில் சிபல் மறைமுகமாக விஜய் மல்லையாவை குறிப் பிட்டு வாதாடினார். 6,000 கோடி ரூபாய் செலுத்தாதவர்கள் இந்தியாவுக்கு வராமல் இருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள் 11,000 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறோம். மேலும் தொகையை செலுத்த இருக்கிறோம் என்றார். தவிர முதலீட்டாளர்களுக்கு தொகையை திருப்பி கொடுக்க சஹாரா குழுமத்துக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி டிஎஸ் தாகுர் கூறும்போது, உங்களிடம் ரூ.1,87,000 கோடி சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களது சொத்துகளை விற்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மீதம் இருக்கும் தொகையை எப்போது, எப்படி செலுத்தப்படும் என்னும் திட்ட அறிக்கையை வரும் அக்டோபர் 24-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தும் டிஎஸ் தாகுர் உத்தரவிட்டார்.

சுப்ரதா ராயின் தாயார் கடந்த மே மாதம் இறந்தார். அப்போது ஜாமீனில் சென்றார். அதிலிருந்து ஜாமீன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x