Published : 22 May 2022 07:44 AM
Last Updated : 22 May 2022 07:44 AM

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் அந்நிய முதலீடு 8,357 கோடி டாலராக உயர்வு

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் இந்தியா 8,357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரையில் அந்நிய நேரடி முதலீடு 14,110 கோடி டாலராக இருந்தது. 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரையில் அது 17,184 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்குள் வந்த மொத்த முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு 27 சதவீதம் ஆகும். இரண்டாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதன் பங்கு 18 சதவீதம் ஆகும். மூன்றாம் இடத்தில் மொரிஷியஸ் உள்ளது. அதன் பங்கு 16 சதவீதம் ஆகும்.

மொத்த முதலீட்டில் கணினி துறையின் பங்கு 25 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக சேவைத் துறை மற்றும் வாகனத் துறை தலா 12 சதவீதம் அளவில் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளன.

உற்பத்தித் துறையில் முதலீடு 2020-21ம் நிதி ஆண்டில் 1,209 கோடி டாலராக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் அது 76 சதவீதம் உயர்ந்து 2,134 கோடி டாலராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x