Last Updated : 24 Mar, 2016 09:34 AM

 

Published : 24 Mar 2016 09:34 AM
Last Updated : 24 Mar 2016 09:34 AM

ஏர் இந்தியாவின் 49% பங்குகளை விற்க பரிசீலனை

நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை விற்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது குறித்து 5 நபர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இக்குழுவில் நிதி அமைச்சகம், விமானபோக்குவரத்து துறை அமைச்சகம், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் என ஐந்து நபர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த நிதி ஆண்டின் வருவாய் இலக்கை எட்டுவதற்கு இந்த பங்கு விலக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.என். சௌபே, இப்படியான திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு இது திட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்று மறுத்தனர்.

ஏர் இந்தியா நிறுவனம் கடைசியாக கடந்த 2007-ம் ஆண்டு லாபம் ஈட்டியது. சமீப காலங்களில் போட்டி அதிகரித்து வருவதால் தனது சந்தையை தனியார் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா இழந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x