Published : 23 Mar 2016 10:06 AM
Last Updated : 23 Mar 2016 10:06 AM

இவரைத் தெரியுமா?- அதுர் ரஹ்மான்

வங்கதேச மத்திய வங்கியின் தலைவராக 2005 லிருந்து பணியாற்றி சமீபத்தில் பதவி விலகியவர். வங்கதேசத்தில் மைக்ரோ பைனான்ஸ் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பொருளாதார அறிஞர், பேராசிரியர், ஆய்வாளர், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகக் குரல் கொடுப்பவர், சூழலியல் நண்பர் என வகைகளில் செயல்பட்டு வருபவர்.

டாக்கா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றியவர். வங்கதேச கடன் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர். பல்வேறு லாப நோக்கமற்ற பொருளாதார மேம்பாட்டு அமைப்புகளின் இயக்குநராகவும் பணியாற்றியவர்.

வங்கதேச வர்த்தக வங்கியான சோனாலி வங்கியின் இயக்குநராகவும், ஜனதா வங்கியின் தலைவர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

வங்கதேச பட்ஜெட் தயாரிப்புக்கு பொறுப்பு வகித்தவர்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வு பட்டமும் பெற்றவர். உலக அளவில் பல பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x