Published : 10 Mar 2016 10:16 AM
Last Updated : 10 Mar 2016 10:16 AM

இவரைத் தெரியுமா?- கேஷப் பாண்டா

லார்சன் அண்ட் டூப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர். 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டிலிருந்து லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை டெக் மஹிந்திரா நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸியில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றியவர். மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியவர்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் பிரிவில் முதுநிலை பட்டமும், வார்ட்டன் வணிகக் கல்வி மையத்தில் மேலாண்மை பிரிவில் பட்டமும் பெற்றவர்.

தகவல் தொழில்நுட்ப துறையின் அமைப்பான நாஸ்காமில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஐ.டி துறையில் 27 வருட பணி அனுபவம் கொண்டவர்.

லார்சன் அண்ட் டூப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x