Last Updated : 25 Feb, 2016 11:01 AM

 

Published : 25 Feb 2016 11:01 AM
Last Updated : 25 Feb 2016 11:01 AM

உற்பத்தி துறையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு உதட்டளவில் மட்டுமே செயல்படுகிறது: பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஷூம்தார் ஷா விமர்சனம்

உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு உதட்டசைவில் மட்டுமே செயல்படு கிறது என்று பயோகான் நிறுவனத் தின் தலைவர் கிரன் மஷூம்தார் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா வில் தொழில் மேற்கொள்வதற்கு ஏற்ற நிலையான கொள்கைகளை வகுப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவ ராக உள்ள மசூம்தார் ஷா மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக் கும் ஒரு சில தொழில்துறையாளர் களில் ஒருவர்.

தற்போதைய நிலையில் தொழில் மேற்கொள்ள எளிதான நடைமுறையும், நிலையான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டியதும் மத்திய அரசுக்கு தேவையாக உள்ளது. இந்த விஷயத் தில் மத்திய அரசிடம் தெளிவில்லாத, அர்த்தமே இல்லாத சொல் மயக்கங்கள் உள்ளது என்றார்.

தொழில் மேற்கொள்வதற்கான எளிதான வழிகளை மேம்படுத்து வதில் எந்த முன்னேற்றத்தையும் பார்க்கவில்லை. இது எனக்கு சிக்கலானதாகக் கருதுகிறேன். கொள்கைகளில் தெளிவும் எந்த நிலைதன்மையும் இல்லை என்றே நான் கருதுகிறேன். இதை அனைத்து அரசாங்கங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உற்பத்தி துறையை ஊக்குவிப் பது மிகப்பெரிய தேவையாக இருக் கிறது என்றும் வலியுறுத்தினார்.

மேக் இன் இந்தியா என்று சொல் வதை தவிர அதற்காக வேறு எந்த கொள்கைகளும் உருவாக்க வில்லை. அரசு தொடர்ச்சியாக சேவைத்துறைக்கு மட்டுமே முக் கியத்துவம் கொடுத்து வருகிறது. உற்பத்தி துறையைப் பொறுத்த வரை உதட்டசைவில் மட்டுமே செயல்படுகிறது. உற்பத்தித்துறை கொள்கைகளை வகுப்பதில் வெறும் உதட்டசைவிலான செயல் களை மத்திய அரசு நிறுத்தவேண் டும். உடனடியாக இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமாக மத்திய அரசு ஏதா வது செய்ய வேண்டும் என்றார்.

இந்திய நிறுவனங்கள் மத்திய அரசிடம் இருந்து சலுகைகள் எதிர்பார்ப்பதை நிறுத்த வேண்டும் வருகிற மத்திய பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, குறைந்த விலை வீடுகள் மற்றும் சமூக பொருளாதார திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியவர், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையும் மிகப்பெரிய துறையாக உள்ளது, அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்து முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

வளர்ச்சிக்கான பொருளாதாரத் தேவை குறித்து நான் கேள்வி கேட் கிறேன். கொள்கைகள் அல்லது செயல்கள்தான் பிரதிபலிக்க வேண்டும். நான் என்னுடைய கருத்தை வெளியிட வேண்டுமா அல்லது கூடாதா என்பது எனக்கு தெரிய வில்லை. கட்டுமானத்துறை பெரிய அளவில் செயல்படும்பட்சத்தில், மத்திய அரசு சிறப்பாக தன் னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்றியது என்று கூறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x