Last Updated : 07 Dec, 2015 09:42 AM

 

Published : 07 Dec 2015 09:42 AM
Last Updated : 07 Dec 2015 09:42 AM

கூடுதலாக செலுத்திய வரியை விரைவாக திருப்பி கொடுக்க மத்திய அரசு உத்தரவு

கூடுதலாக செலுத்தப்பட்ட வரி 50,000 ரூபாய்க்குள் இருக்கும் பட்சத்தில் அதனை விரைவில் திருப்பி கொடுக்குமாறு மத்திய நேரடி வரி ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அரசாங்க தகவல்படி கூடுதலாக செலுத்தப்பட்ட வரித் தொகை ரூ. 5,400 கோடி வரி செலுத்தியவர்களுக்கு இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை குறித்து வருவாய் செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் மத்திய நேரடி வரி ஆணையத்தின் உயர் அதிகாரிகள், நிதி அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், வரியை திருப்பி கொடுப்பது தொடர்பான கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நவம்பர் 1-ம் தேதி நிலவரப் படி 2013-14ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டதில் 659 கோடி ரூபாயும், 2014-15-ம் ஆண்டுக்கான வரி தாக்கல் செய்யப்பட்டதில் 4,837 கோடி ரூபாயும் இன்னும் திருப்பி கொடுக்கப்படாமல் இருக் கிறது. இதில் பெரும்பாலும் 50,000 ரூபாய்க்கு உள்பட்ட தொகைதான் என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

கூடுதலாக செலுத்திய தொகையை திரும்ப வாங்குவது என்பது வரிசெலுத்தியவரின் உரிமையாகும். நிதி அமைச்சகத் துக்கு வந்திருக்கும் கோரிக்கை களில் பெரும்பாலானவை இது சார்ந்தவைதான். இதற்கு உரிய தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x