Published : 02 Dec 2015 10:31 AM
Last Updated : 02 Dec 2015 10:31 AM
பார்தி ஆக்ஸா லைப் மற்றும் பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் கூட்டு நிறுவனத்தில் ஆக்ஸா நிறுவனத்தின் முதலீடு உயர்ந்துள்ளது. சமீபத்தில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதால் பிரான்ஸ் நிறுவனமான ஆக்ஸா இந்த நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை உயர்த்திக்கொண் டுள்ளது.
ஆக்ஸா நிறுவனம் முதலீட்டை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பார்தி ஆக்ஸா நிறுவனத்தில் 858.6 கோடி ரூபாயும், பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 431.40 கோடி ரூபாயும் முதலீடு செய்திருக்கிறது. இந்த இரு நிறுவனங்களில் மொத்தமாக 1,290 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் பார்தி ஆக்ஸா லைப் இன்ஷூ ரன்ஸ் நிறுவனம் 470 கோடி ரூபாய் அளவுக்கு புதிய பாலிசி களின் மூலம் பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.
அதேபோல பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் மூலம் 1,460 கோடி ரூபாய் அளவுக்கு பிரீமியம் வசூல் செய்திருக்கிறது.
இந்த கூட்டு நிறுவனத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக் கிறது. பார்தி நிறுவனத்துடன் இணைந்திருப்பதன் மூலம் இன்ஷூரன்ஸ் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்று ஆக்ஸா நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி ஜீன் லூயி லாரென்ட் ஜோசி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT