Published : 21 Oct 2015 09:52 AM
Last Updated : 21 Oct 2015 09:52 AM
ஸ்வீடனைச் சேர்ந்த ஆட்டொ மொபைல் நிறுவனமான வோல்வோ நிறுவனத்தின் ஐடி பிரிவு தொழிலை ஹெச்சிஎல் டெக் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த இணைப்பின் மதிப்பு சுமார் ரூ. 895 கோடி ஆகும். தவிர ஐடி கட்டுமான செயல்பாட்டு பிரிவினை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறது.
ஸ்டாக்ஹோம் நகரில் இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இறுதி ஒப்பந்தம் இன்னும் முடிவு பெறவில்லை.
இந்த இணைப்பு காரணமாக சர்வதேச அளவில் 2,600 நபர்கள் பாதிக்கப்படுவார்கள். அதேசமயத்தில் அவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT