Published : 07 Sep 2015 09:46 AM
Last Updated : 07 Sep 2015 09:46 AM
சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வியாபார மேம்பாட்டுக்காக தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாபோ செயலியில் மேலும் ரூ.665 கோடி முதலீடு செய்ய விருப்பதாக ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலையில் அறிமுகப் படுத்தப்பட்டது முதல் இருந்து இதுவரை 20,000 சிறு நிறுவ னங்கள் இந்த செயலியில் இணைந்திருக்கிறார்கள்.
பெரிய விளம்பரம் இல்லாமல், பயன்படுத்தியவர்கள் தெரிவித்த கருத்துகள் மூலமாக புதியவர்கள் வந்திருக்கிறார்கள். அடுத்த ஒரு வருடத்தில் 10 லட்சம் சிறு நிறுவனங்கள் இதில் இணையும் என்று ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் குனால் பஹல் தெரிவித்தார்.
அலிபாபா குழுமத்தின் டாபோ நிறுவனத்தின் தூண்டுதலால் இந்த நிறுவனத்தை தொடங்கி னேன். விளம்பரங்கள் மூலமே இந்த செயலி வருமானம் ஈட்டும். ஷாபோ பிராண்டை மேம்படுத்துவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் ரூ.665 கோடி முதலீடு செய்யப்படும் என்றார்.
தொழில்முனைவோர்கள் தங்களது பொருட்களை இந்த செயலில் பதிவேற்றிக் கொள்ள லாம். இதில் விற்கும் பொருளுக்கு எந்தவிதமான தரகும் கொடுக்கத் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT