Published : 16 Mar 2020 03:01 PM
Last Updated : 16 Mar 2020 03:01 PM

யெஸ் வங்கி 18-ம் தேதி முதல் முழு அளவில் செயல்படும்; அனைத்து சேவைகளும் கிடைக்கும் 

மும்பை

நாளை மறுதினம் மாலை முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.

வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.

யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்று நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வங்கியின் தலைமைச் செயல்அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டுகளுக்கு பிரசாந்த் குமார் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளை மறுதினம் மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவை உட்பட யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x