Last Updated : 27 May, 2015 09:56 AM

 

Published : 27 May 2015 09:56 AM
Last Updated : 27 May 2015 09:56 AM

சரிந்த பொருளாதாரத்தை ஓராண்டில் மீட்டுள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் நாட்டில் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத் துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பியுள்ளதோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளோம். இந்தியா மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் வரும் நாள்களில் அரசின் செயல்பாடு அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு திறந்த மடல் மூலம் ஓராண்டு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள மோடி, அதில் பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக் கப்பட்டுள்ளது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற் றுள்ளது. கடந்த ஓராண்டில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத் தப்பட்டுள்ளது.

நிதி நிர்வாகம் மேம்படுத்தப் பட்டுள்ளதால் அந்நிய முதலீட் டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி குறித்து தரச்சான்று நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வெளி யிட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது.

அரசு பல விஷயங்களில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.

அதில் குறிப்பிடத்தக்கது டீசல் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியதாகும். அத்துடன் காப்பீட்டுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒரே சீரான வரி விதிப்பைக் கொண்டு வருவ தற்காக சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக் கத்துக்கு தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஓராண்டு முன்பு இந்தியாவை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பொரு ளாதார சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் நம்பி என்னை தேர்வு செய்தீர்கள். இந்த எதிர்பார்ப்பில் அதிகபட்சம் பூர்த்தி செய்துள்ளோம். இருந்தாலும் இது தொடக்கம்தான். வரும் காலங்களில் உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்ததையும் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஓராண்டுக்கு முன்பு நாட்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீத அளவுக்கு இருந்தது. இதை 3.9 சதவீதமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மிகவும் துணிச்சலாக கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் கிடைக்கும் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பின ரையும் சென்று சேரும் வகையில் அதிலும் குறிப்பாக ஏழைகள், விவசாயிகள் பெண்கள் பயன டையும் வகையில் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்காக சர்வதேச வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) ஒரு சமாதான பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானியம் தொடர வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக 15 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 15,800 கோடி புழக்கத்துக்கு வந்துள்ளது.

அனைவருக்கும் கட்டுபடி யாகும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், குறிப்பாக ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, விபத்து காப் பீட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 6.75 கோடி மக்கள் இத்திட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பயனடையும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் முத்ரா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையினருக்கு எளிய வகையில் கடன் கிடைக்க வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற் காக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பண பதுக்கல் காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமை யாக்குவதற்காக `மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

சமையல் எரிவாயு மானி யத்தை முதலீட்டாளர்கள் நேரடி யாகப் பெறும் வகையில் பயனீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய மக்களுக்கு மானியத் தொகை சென்றடைய வழியேற்பட்டுள்ளது.

காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வேத் துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளன.

வங்கித் துறையில் அரசியல் குறுக்கீடு என்பது கடந்த கால சம்பவங்களாக மாறிவிட்டன. நிலக்கரி சுரங்கங்கள் வெளிப் படையான முறையில் ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 3.35 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

நடப்பாண்டில் பொதுத் துறையில் அரசு ரூ. 1 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தொகை டிஜிட்டல் இணைப்புக்காகவும், பிற இணைப்புகளுக்காகவும் செல விடப்பட உள்ளது.

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முடங்கியுள்ள நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. மின் உற்பத்தியும் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது. தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதையும் மோடி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x