Published : 14 Aug 2017 10:21 AM
Last Updated : 14 Aug 2017 10:21 AM
சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு ஜிஎஸ்டி அமைப்பின்கீழ் கூடுதல் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வளர்ச்சி பாதிக்கும் என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யெய்ச்சிரோ யுனோ தெரிவித்துள்ளார்.
சொகுசு மற்றும் எஸ்யுவி கார்களுக்கான ஜிஎஸ்டி செஸ் வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா சிஇஓ யெய்ச்சிரோ யுனோ கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வரி சீர்திருத்தத்தை முழுவதுமாக வரவேற்கிறோம்.
சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட கார் வகைகளின் மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் சொகுசு மற்றும் எஸ்யுவி கார்களுக்கான செஸ் வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை அளிக் கிறது. இந்த முடிவால் இந்தியா தனிமைப்படுத்தப்படும். மேலும் சிறிய கார்களுக்கே இங்கு வளர்ச்சி இருக்கும். மேம்படுத்தப்பட்ட சர்வதேச மாடல் கார்கள் விற்பனை வெகுவாக பாதிக்கப் படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் சர்வதேச மாடல்களோடு ஒப்பிடுகையில் வேறு மாதிரியாக இருந்தால் இந்திய ஆட்டோ மொபைல்துறை வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் இங்கிருந்து கார்கள் மற்றும் கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்படும். இவ்வாறு யெய்ச்சிரோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT