Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM
வியாழன் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் 184 புள்ளிகளும், நிப்டி 52 புள்ளிகளும் உயர்ந்தன. சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய சீர்திருத்தங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் துறை பங்குகளை தவிர அனைத்து பங்குகளும் உயர்ந்து முடிவடைந்தன. வங்கி, கேபிடல் குட்ஸ், மெட்டல், ஹெல்த்கேர் உள்ளிட்ட துறை பங்குகளில் வாங்கும் போக்கு இருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை களுக்கு விடுமுறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT